செய்திகள்,திரையுலகம் வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…

வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…

வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!… post thumbnail image
சென்னை:-மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் கலெக்டராக நடித்தவர் அரவிந்த்சாமி. அதையடுத்து ரோஜா, பம்பாய், என் சுவாசக்காற்றே, இந்திரா, மின்சாரகனவு என பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கேற்ற கதைகள் அமையவில்லை என்றதும், நடிப்பை விட்டு விலகியிருந்தார் அரவிந்த்சாமி.

ஆனால் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே மணிரத்னம் தனது கடல் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் பாதிரியாராக நடித்த அரவிந்த்சாமிக்கு உடனடியாக தமிழில் படங்கள் கிடைக்கவில்லை. அதனால் மலையாளத்தில் பிருதிவிராஜூடன் ஒரு படத்தில் நடித்தவர், இப்போது இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். அப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.இதற்கிடையே கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அரவிந்த்சாமிதான் வில்லனாக நடிப்பதாக இருந்தது.

ஆனால், போட்டோசெஷனுக்குப்பிறகு தான் எதிர்பார்த்த வில்லனாக அரவிந்த்சாமியின் தோற்றம் இல்லை என்று அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து விட்டார் கெளதம்மேனன்.
இந்நிலையில், தற்போது ஜெயம்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவிநயன்தாரா நடித்து வரும் தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லன் வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி