செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பிரபல நடிகைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வெறுப்பேற்றிய வாலிபர்….

பிரபல நடிகைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வெறுப்பேற்றிய வாலிபர்….

பிரபல நடிகைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வெறுப்பேற்றிய வாலிபர்…. post thumbnail image
கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘போனி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி கர்பண்டா. இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி கர்பண்டா சமீபத்தில் மும்பையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பயணம் செய்த போது அவருடைய செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்தி வந்துகொண்டே இருந்தது. அவர் அணிந்திருக்கும் உடை, சிகையலங்காரம், அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உணவு ஆகியவை குறித்து தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்துகொண்டே இருந்ததால், தன்னை யாரோ மிக அருகில் இருந்து நோட்டமிட்டு தனக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

பின்னர் இந்த குறுஞ்செய்திகளை அனுப்புவது தனக்கு பின்னால் பயணம் செய்துவரும் ஒரு சக பயணி என்பதை அவர் கண்டுபிடித்து விட்டாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமைதியாக பயணம் செய்தார். விமானம் பெங்களூர் வந்ததும் அந்த பயணியை பிடித்து காவல்துறையினர்களிடம் இழுத்து சென்று புகார் கொடுத்தார். அந்த வாலிபரின் மொபைலை சோதனை செய்தபோது அவர்தான் அனைத்து குறுஞ்செய்திகளையும் அனுப்பியது உறுதிபடுத்தப்பட்டது. பின்னர் கீர்த்தி கர்பண்டா கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பெங்களூர் விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி