செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பிரபல இயக்குனர் செக் மோசடி வழக்கில் கைது…!

பிரபல இயக்குனர் செக் மோசடி வழக்கில் கைது…!

பிரபல இயக்குனர் செக் மோசடி வழக்கில் கைது…! post thumbnail image
காதல்மன்னன், அமர்க்களம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., உள்பட பல்வேறு படங்களை இயக்கியவர் டைரக்டர் சரண். தற்போது இவர் ‘ஆயிரத்தில் இருவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நெல்லை ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் படப்பிடிப்பு நடந்தது. இதில் டைரக்டர் சரண் கலந்து கொண்டு படத்தின் காட்சிகள் குறித்து நடிகர், நடிகைகளுக்கு விளக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தை சேர்ந்த தனிப்படை போலீசார் வந்தனர். உடனே சரண் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு போலீசாரிடம் விளக்கம் கேட்டார். அவர்கள் ரூ.50 லட்சம் செக் மோசடி வழக்கில் உங்களுக்கு சிவகாசி கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஆஜர்படுத்த உங்களை கைது செய்கிறோம் என்றனர்.

இதையடுத்து போலீசார் சரணை கைது செய்து போலீஸ் வேனில் சிவகாசி கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. செக் மோசடி வழக்கில் டைரக்டர் சரண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி