செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் விஜய்யின் அதிரடியால் அதிர்ச்சி அடைந்த எதிர்ப்பாளர்கள்…!

விஜய்யின் அதிரடியால் அதிர்ச்சி அடைந்த எதிர்ப்பாளர்கள்…!

விஜய்யின் அதிரடியால் அதிர்ச்சி அடைந்த எதிர்ப்பாளர்கள்…! post thumbnail image
‘கத்தி’ படத்தின் பிரச்சனையை முதலில் தமிழ் அமைப்புகளுடன் சுமூகமாக பேசி முடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் தூது சென்றார். அவர் சீமான், நெடுமாறன் போன்ற அமைப்பு தலைவர்களை சந்தித்து படம் குறித்தும், தயாரிப்பாளர் குறித்தும் விளக்கம் அளித்தார். ஆனால் அது எதிர்மறை விளைவைத்தான் தோற்றுவித்தது. மாணவர் அமைப்பு என்ற பெயரில் சில பெரிய சக்திகள் படத்தை தடை செய்யும் சதிச்செயலில் இறங்கியுள்ளதை அறிந்த விஜய், இதற்கு மேல் இந்த பிரச்சனையை பெரிதாக்க விரும்பாமல், தயாரிப்பாளர்களிடம் பேசி தானே அந்த படத்தின் உரிமை முழுவதையும் பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.

‘கத்தி’ படத்தில் தயாரிப்பாளர் பிரச்சனையை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லாததால், தயாரிப்பாளரை மாற்றிவிட்டால் உடனடியாக அந்த படத்தை எதிர்க்கும் கும்பல் அடங்கிவிடுவார்கள். அதுவும் சொந்தப்படமாக்கிவிட்டால், எந்த பிரச்சனையும் வராது என்ற எண்ணத்தில் களமிறங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் ஒத்துழைப்பதாகவும், விஜய் படத்தின் உரிமையை வாங்க முன்வந்தால், தனது நிறுவனமும் அந்த படத்தில் முதலீடு செய்யத்தயார் என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது.

எனவே லைக்கா நிறுவனத்தினடம் படத்தின் உரிமையை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று விஜய் தனது ரசிகர் மன்ற முக்கிய பொறுப்பாளர்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் படு உற்சாகத்துடன் உள்ளனர். விஜய் நடிக்கும் படம் என்றாலே உற்சாகமாக இருக்கும் ரசிகர்கள் அந்த படத்திற்கு விஜய்யே தயாரிப்பாளர் என்றால் கேட்கவும் வேண்டுமா? இந்த படத்தை தமிழ்த்திரையுலகில் இதுவரை பெறாத வெற்றியை இளையதளபதிக்கு பெற்றுக்கொடுப்போம் என்று சபதம் எடுத்துள்ளனர். விஜய்யின் அதிரடி முடிவை கண்டு இந்த பிரச்சனையை பெரிதாக்கலாம் என மனப்பால் குடித்தவர்கள் தற்போது கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி