செய்திகள்,திரையுலகம் ஜெயம்ரவி, அதர்வாவுக்காக காத்திருக்கும் தங்கர் பச்சான்!…

ஜெயம்ரவி, அதர்வாவுக்காக காத்திருக்கும் தங்கர் பச்சான்!…

ஜெயம்ரவி, அதர்வாவுக்காக காத்திருக்கும் தங்கர் பச்சான்!… post thumbnail image
சென்னை:-அம்மாவின் கைபேசி படத்திற்கு பிறகு தங்கர் பச்சான் சினிமா ஏரியா பக்கம் அதிகம் காணப்படவில்லை. மிகவும் எதிர்பார்த்த அம்மாவின் கைபேசி தோற்றதில் ரொம்பவே அப்செட். ஆனால் இப்போதும் மீண்டும் சுறுசுறுப்பாகி விட்டார். காரணம் நீண்ட நாள் காத்திருக்கும் அவரது களவாடிய பொழுதுகள் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

தற்போது விஜய் நடிக்கும் கத்தி படத்தை தயாரித்து வரும் ஐங்கரன் நிறுவனம்தான் களவாடிய பொழுதுகள் படத்தையும் தயாரித்துள்ளது. கத்தி திரைப்படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களிடமே களவாடிய பொழுதுகள் படத்தையும் கொடுக்க இருக்கிறது. எனவே கத்தி வெளிவருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு களவாடிய பொழுதுகள் வெளிவரும் என்பதால் தங்கர் பச்சான் உற்சாகமாக இருக்கிறார்.

பல ஆண்டுகளாக பிற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதை நிறுத்தி வைத்திருந்த தங்கர் பச்சான் மீண்டும் கமர்ஷியல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். அதோடு தன் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்டையும் எழுதி முடித்து விட்டார் இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் பவர்புல் ஸ்கிரிப்டாம். ஜெயம்ரவி, அதர்வாவிடம் கதை சொல்லியிருக்கிறார். இப்போது அவர்கள் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி