செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது – 3 பேர் பலி …

இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது – 3 பேர் பலி …

இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது – 3 பேர் பலி … post thumbnail image
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் ஹேரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் ‘திடீர்’ தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகளுடன் வந்த 3 பேர் தூதரகம் மீது சரமாரியாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், தூதரகப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

தூதரகத்தின் உள்ளே ஊடுருவ முயன்றவர்களை இந்திய வீரர்கள் எதிர்த்து போரிட்டதாகவும், இதில் 3 பேர் பலியானதாகவும், இந்திய வீரர்களுக்கு துணையாக ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தற்போது ஊடுருவலாளர்களை எதிர்த்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி