செய்திகள் நைஜீரியாவில் கார்குண்டு தாக்குதலில் 17 பேர் பலி…

நைஜீரியாவில் கார்குண்டு தாக்குதலில் 17 பேர் பலி…

நைஜீரியாவில் கார்குண்டு தாக்குதலில் 17 பேர் பலி… post thumbnail image
மைதுகுரி:-நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ என்ற தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிரான வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறது. வெடி குண்டு தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள மைதுகுரி நகரில் கார்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் நிறுத்தியிருந்த காரில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.அதில், அங்கிருந்த 17 பேர் அதே இடத்தில் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். குண்டு வெடித்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்கள், மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கி தீப்பிடித்தன.

பல கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சந்தேகப்படும் நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி