செய்திகள் சிங்கப்பூரில் குடிக்க தடை…

சிங்கப்பூரில் குடிக்க தடை…

சிங்கப்பூரில் குடிக்க தடை… post thumbnail image
சிங்கப்பூர் : ஜனவரி 17ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விழா நடைபெறும் பாதைகளில் ஆல்கஹால் விற்பனை மற்றும் உபயோகத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8ம் தேதி லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தைப்பூச ஊர்வலம் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து காலை 11 மணிக்கு துவங்கி, டேங்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலை சென்றடைய உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி