இதர பிரிவுகள்,செய்திகள்,முதன்மை செய்திகள் கிறிஸ்துமஸ் தாத்தா திருடர்கள்…

கிறிஸ்துமஸ் தாத்தா திருடர்கள்…

கிறிஸ்துமஸ் தாத்தா திருடர்கள்… post thumbnail image
குழந்தைகளுக்கு ப்ரியமான கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் சாண்டாகிளாஸ் என்றாலே அனைவருக்கும் பரிசுகளையும், இனிப்புகளையும் வழங்குவார் என்பதுவே இதுநாள் வரை நாம் அறிந்ததே. ஆனால் இந்த வருடம் சாண்டாவின் வேடத்தில் வந்த நால்வர் கும்பல் ஒன்று அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் இருந்த வர்த்தக வளாகத்தில் கொள்ளையடித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை சாண்டாகிளாஸ் வேடத்தில் வந்த அந்த நான்கு திருடர்களும் தானியங்கி ஆயுதங்களுடன் டிஇஜி என்று அழைக்கப்படும் அந்த வர்த்தக வளாகத்தினுள் நுழைந்து, துப்பாக்கிமுனையில் கடை உரிமையாளரை அச்சுறுத்திய அவர்கள் அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களையும், நகைகளையும் தங்களின் சாக்குப்பைகளில் நிரப்பிக்கொண்டு தப்பித்துள்ளனர். அவர்கள் தப்பிச்சென்ற கார் 2 கி.மீ தொலைவில் கைவிடப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

வளாகத்தின் அருகே இருந்த குப்பைத் தொட்டிக்குள் இருந்து இரண்டு துப்பாக்கிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இதன் தொடர்நிகழ்ச்சியாக அந்நகருக்கு அருகில் உள்ள கொசோவோவின் தெற்குப் பகுதி நகரமான பிரிஸ்ரெனில் உள்ள நகைக்கடை ஒன்றில் சாண்டா வேடமணிந்திருந்த மூன்று திருடர்கள் நேற்று நுழைந்துள்ளனர். கடையிலிருந்த இரண்டு பேரைத் தாக்கிவிட்டு அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பித்துவிட்டதாக டிரானாவின் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி