இதர பிரிவுகள்

இதர பிரிவுகள்

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

சே! என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது?

சேகுவாராவின் இளமைப்பருவம்….!! சேகுவாரா 1928ஆம் ஆண்டு ,ஜூன் மாதம் 14ஆம் தேதி அர்ஜென்டீனாவில் பிறந்தார் . ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் மற்றும் சிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவராக பிறந்தார் . அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா என பெயர் சூட்டினர். அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. சேவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை, தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். இவர் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்குஇவருக்கு கிடைத்தது. இவரது தந்தை , சோசலிசத்தில் ஆதரவாளராக இருந்தார் .இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது. ஆஸ்துமா நோய்: “சே”வுக்கு இரண்டு வயது இருக்கும் . நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய் , ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார் .நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராட வைக்க , ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி ,ஆஸ்துமா இவரை இறுகப்பற்றியது . வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்துமா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப்பெயர் இட்டு அழைத்தனர். தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப்பழகிய சே குவேரா ,12வது வயதில் உள்ளூர் சுற்றுப்போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார் .வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் .நெருடா, கீட்ஸ், மாச்சாடோ. லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்களின் மீது இவருக்கு சிறந்த ஆர்வம் இருந்தது.

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்!!

கல்பனா சாவ்லா இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தார் . இவருடைய பள்ளி சான்றிதழில் 1961ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் 1997ஆம் ஆண்டு கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்-87ல் ஆறு வீரர்கள் கொண்ட குழுவுடன் முதல்முறையாக விண்வெளிக்கு சென்றார். இந்த விண்கலம் விண்வெளியில் 372 மணிநேரம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 252 தடவை பூமியைச் சுற்றியது. மீண்டும் 2003ஆம் ஆண்டு கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ் -107ல் கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு சென்றனர் .பிப்ரவரி 1ஆம் தேதி , பயணம் முடித்து விண்கலம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக , விண்கலம் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். வானத்தை வசப்படுத்திய கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக கர்நாடக அரசும் , இந்திய அரசும் சாதனை புரியும் பெண்களுக்கு இவரது பெயரில் விருது வழங்கி வருகிறது.

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

புரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்?

சேகுவாரா!!! உலகம் முழுக்க சில பரிச்சயமான உருவ அமைப்புகள் பல பிரபலமாகும் , அது ஏன்?எதற்கு?எப்படி? என்று நம்மால் வரையறுக்க முடியாது. அப்படியான ஒரு உருவம்தான் ,முக சவரம் செய்யப்படாமல் சிலுப்பிய தலையோடு ,சிகார் சகிதமாக ,கம்பீரமான ஆளூமையாக ,டி-சர்டில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் செருப்பு வரை ஒரு உருவம் பிரபலம் என்றால் அது சேகுவாரா தான். கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன். சேகுவாரா புரியாதவர்களுக்கு புதிர் புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன். சேகுவாரா யார்? ஏழைகளை அன்போடு அரவணைப்பவர் . ஒரு சோசலிசப் புரட்சியாளர் ,மருத்துவர், அரசியல்வாதி. மேலும் , கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்கு பெற்ற போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர். சேகுவாரா என்றால் விடுதலை ,ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்பதாகும். சேகுவாரா எனகிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது. இந்த தேசத்தின் பிள்ளை என ஒரு தேசத்திற்குள் குறுக்கிவிட முடியாத வாழ்க்கை வாழ்ந்த போராளி ஆவார். வெனிசுலா, கொலம்பியா, பிரேசில் கியூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போர் முறைகளின் பின்னே சேகுவாரா நின்று இருந்தார். அடிப்படையில் மருத்துவரான இவர் ஆஸ்துமா நோயாளியாகவும் இருந்தார்.ஆனால், மருத்துவம் பார்த்து நோய்களை தீர்ப்பதை விட சமூகத்தின் அழுக்குகளை தீர்க்க வேண்டும் என்கிற உறுதி அவரிடம் இருந்தது. அதற்கு முக்கியமான காரணம் தன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுக்க சுற்றியதுதான் அதோடு கார்ல் மார்க்கசையும் , லெனினையும் உள்வாங்கி படித்த அவர் ஏழைகளும் , பாட்டாளிகளும் படும் துன்பங்களை அறிந்த போதுதான் போராளியானார். தொடரும்……..

இதர பிரிவுகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

வில்லாதி வில்லன்!

எம்.என்.நம்பியார்: மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதை எம்.என் .நம்பியார் என்று சுருக்கமாக அழைக்கிறோம். இவர் 1919ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்தார்.தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த்திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார் . குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்)எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார். தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால் ,தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக்குழுவில் சேர்ந்து சேலம் ,மைசூர் எனச் சுற்றினார் .ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை.நாடகக் கம்பனியின் சமையலறையில்உதவியாளராகவே இருந்தார்.வேடம் போட்டால் தான் சம்பளம் .இலவசச் சாப்பாடும் ,படுக்க இடமும் கிடைத்தது. 1935ஆம் ஆண்டு பக்தராம்தாசு என்ற படத்தில் மாதண்ணா என்ற நகைச்சுவை வேடத்தில் நடித்தார் ,இதுவே அவரின் முதல் திரைப்படம் .இப்படத்தில் நடித்ததற்காக 40 ரூபாய் கொடுக்கப்பட்டது.இதற்கு பிறகு பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 1000 படங்களுக்கு மேல் நடித்த இவர் ,தனது நம்பியார் நாடக மனறம் மூலம் இரு நாடகங்களை பலமுறை அரங்கேற்றியுள்ளார். திகம்பரசாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார்.

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

உலகின் முதல் ஒளிப்படம் கண்டு பிடித்தவர் யார் என்று தெரிய வேண்டுமா?

உலகின் முதல் ஒளிப்படம் : உலகின் முதலாவது ஒளிப்படத்தை கண்டுபிடித்த ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் 1756ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிரான்ஸில் சாவோன் எட் லொய்ரேயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் 1825ஆம் ஆண்டு மனிதனையும் , குதிரையொன்றையும் காட்டும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்தார் இவர் இருட்டறை என அழைக்கப்பட்ட ஒரு வகை இருட்டாக்கப்பட்ட அறையில் ஒரு பக்கத்தில் வெளிக்காட்சிகளின் பிம்பத்தை விழச் செய்து அதையொட்டிக் கோடுகளை வரைந்து படங்களி உருவாக்கினார். பிறகு 1824ஆம் ஆண்டிலேயே நிலைத்திருக்கக்கூடிய ஒளிப்படத்தை இவர் எடுத்ததாக சொல்லப்படுகிறது.1829ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே என்பவருடன் சேர்ந்து பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினார். 2002ஆம் ஆண்டில் இவர் 1825ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ஏலத்தில் 4,50,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது. ஒளிப்படவியல் துறையின் முன்னோடி ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் தனது 68வது வயதில்(1833) மறைந்தார்.

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

நலம் தரும் தாவரங்கள்-பிரண்டை

இதயம் காக்கும் !பசியின்மையை போக்கும்!வாய்வு, செரிமானக்கோளாறை நீக்கும் தாவரம்-பிரண்டை! பிரண்டை , இதன் மற்றொரு பெயர் வஜ்ஜிரவல்லி என்ற பெயரும் உண்டு . இது கொடி வகையைச்சார்ந்தது.இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக்காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக மனித நடமாட்டம் குறைவாகக்காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது . இதன் சாறு உடலில் பட்டால் அரிப்பையும், நமச்சலையும் ஏற்படுத்தும் .இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. அடிபட்ட வீக்கம் , சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது . துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். ஞாபக சக்தியை பெருக்கும் , மூளை நரம்புகளை பலப்படுத்தும், எலும்புகளுக்கு சக்தி தரும் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும் வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெரும் ,உடல் வனப்பும் கூடும். எலும்புகள் சந்திக்கக்கூடடிய இணைப்புப்பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால் , தேவையற்ற நீர் தேங்கி விடும் .இதன் காரணமாக பலர் கழுத்து வலி முதுகு வலியால் அவதிப்படுவார்கள் . மன‍ழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால் , வயிறு செரிமான சக்தியை இழந்து விடும் அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டி விடும் .அஜீரணக் கோளாறுகளைப் போக்கும் .

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

தென்னாட்டின் மொழியினம்-பாகம்4(மலையாளம்)

மலையாளம்: தமிழ் நாட்டின் மேற்கு பகுதியாகிய சேர நாட்டில் பேசப்படும் மொழி இது. திராவிட மொழிகளின் வினைகளில் உள்ள பால் காட்டும் விகுதிகள் மலையாள வினைகளில் இல்லை. இது ஏனைய திராவிட மொழிகளுக்கும் மலையாளத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடாகும் இதனைத் தமிழோடு ஒத்த இன மொழி என்பதை விட , தமிழின்(மிகத்திரிந்த) கிளை மொழி என்று கொள்வது பொருந்தும் என்பார் கால்டுவெல். இம்மொழி தொடக்கத்தில் தமிழின் தங்கையாக அல்லாமல் , மகளாக இருந்த மொழி என அவர் கூறுகிறார். தொடக்கத்தில் சேரநாட்டில் தமிழே பேச்சு மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் இருந்தது.பின்னர் இப்பகுதிக்குத் தமிழ்நாட்டுடன் உறவு குறைந்தமையாலும் வட மொழிச்சார்பு மிகுந்தமையாலும் மிகமித்திரிந்து வேறொரு மொழியாக வளர்ந்தது. அவ்வாறு வளர்ந்த மொழியே மலையாளம் .இது புதிதாக வந்த வேற்று மொழியன்று , அந்நாட்டுத் தமிழ் திரிந்த திரிபே ஆதலின் கிளைமொழி என்பர் கால்டுவெல். இதனால் நாம் தெரிந்து கொள்ளும் உண்மை ஒன்றுண்டு . பழந்தமிழ் வேங்கடத்திற்கு வடக்கே ஒரு வகையாகத் திரிந்து தெலுங்கு மொழியாயிற்று . மேற்கே மற்றொரு வகையாகத்திரிந்து கன்னட மொழியாயிற்று, சேர நாட்டில் பிரிதொரு வகையாகத்திரிந்து மலையாள மொழியாயிற்று.இதுவே மொழியியல் கொள்கைக்குப் பொருந்தியதாகும். காலப்போக்கில் வட மொழிக்கலப்பால் மலையாளம் மிகவும் வேறுபட்டுவிட்டது . மலையாளத்தின் பழைய இலக்கியம் தமிழ் இலக்கியம் போன்றதே .தமிழர்களுக்கு விளங்கும் மொழியாகவே பழைய மலையாளம் உள்ளது. மலையாளத்தின் முதல் இலக்கியம் இராமசரிதம் ,இது தமிழ் ஒலியாலாகிய தமிழ் இலக்கியம் போலவே உள்ளது. பழைய மலையாள இலக்கியத்தில் தமிழ் மொழியில் உள்ள 12 உயிரும் 18 மெய்யும் மிகுதியாக உள்ளன. கிரந்த எழுத்தையொட்டி மலையாளத்திற்கு எழுத்துக்கள் அமைந்ததால் பிற்காலத்தில் மற்ற ஒலிகளும் மிகப் பயின்று கலந்தன. வடசொற்கலப்பும் மிகுந்தது. இம்மாறுதல்கள் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டவையாகும்.

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

14ஆம் நூற்றாண்டின் சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்தவர்!

மைக்கலாஞ்சலோ உலகின் மாபெரும் கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்கலாஞ்சலோ ,1475ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார் .இவருடைய முழுப்பெயர் மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவனோரோட்டி சிமோனி. இவர் தனது 13வது வயதில் ஓவியம் மற்றும் சிற்பக்கலையும் கற்கத் தொடங்கினார். தனது 23வது வயதில் (பியெட்டா)அன்னை மேரி ,இயேசு ஆகிய இருவரது உருவங்களையும் ஒரே பளிங்குக் கல்லால் செதுக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் . அதன் பிறகு , 17 அடி உயரத்தில் டேவிட் சிற்பத்தை உருவாக்கினார். இந்தச் சிற்பம் இவரது புகழை நிலைநிறுத்தியது. இவர் எழுதிய கவிதைகளில் சுமார் 300 கவிதைகள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன . மேலை பரபில் இலக்கியத்திற்கு ஷேக்ஸ்பியர் , இசைக்கு பீத்தோவன்என்று ஒவ்வொரு துறையிலும் மகத்தான சாதனை புரிந்தவர்களின் வரிசையில் , சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்த மைக்கலாஞ்சலோ தனது 88வது வயதில் (1564) மறைந்தார்.

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

முதலில் விண்வெளிக்குச் சென்ற பெண்-பிறந்த தினம் இன்று(மார்ச்-6)

வாலண்டினா டெரஷ்கோவா முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண் என்ற பெருமைக்குரிய வாலண்டினா விளாடிமீரொவ்னா டெரஷ்கோவா 1937ஆம் ஆண்டுமார்ச் 6ஆம் தேதி சோவியத் ரஷ்யாவில் பிறந்தார். 1961ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் ,மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மிகக் கடினமான பயிற்சிகளுக்கு பிறகு 25 வயதான வாலண்டினா தேர்வு செய்யப்பட்டார். வோஸ்டாக் -6 என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது.இவர் பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணி நேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார். இவர் ஹீரோ ஆஃப் சோவியத்யூனியன் என்ற பதக்கம் , லெனின் விருது மற்றும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும் அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்தவர் என்ற பட்டத்தையும் பெற்ற பெருமைக்குரியவர்.

அரசியல், இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

உலகச் செய்திகள்

சிறை தண்டனை பெற்ற அயல் நாட்டினர் ஆஸ்திரேலியாவுக்கு வர தடை செய்யும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் அடுத்த 50 ஆண்டுகளில் ஆயிரத்து 700க்கும் அதிகமான பறவைகளும் , விலங்கினங்களும் அழிந்து போகும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கப்பொருட்களுக்கான நியாயமான வர்த்தகம் இந்திய சந்தையில் கிடைப்பதில்லை என்ற புகாரையடுத்து , இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக தகுதியை நிறுத்தப்போவதாக அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் விமானப்படை தயார் நிலையில் இருக்கும்படி அதன் தளபதி மார்ல் முஜைத் அன்வர் கான் உத்தரவிட்டுள்ளார். திருமணமாகி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில், மனைவியரை கைவட்டதாக 45 இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

Scroll to Top