செய்திகள்,முதன்மை செய்திகள் வறுமையால் சோகமான முடிவு …

வறுமையால் சோகமான முடிவு …

வறுமையால் சோகமான முடிவு … post thumbnail image
விருதுநகர் அனுமான் நகரை சேர்ந்தவர் பால்பாண்டி, 54. (மாற்று திறனாளி). மனைவி முருகேஸ்வரி, 50, தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்தார். மகன், விருதுநகரில் உள்ள கடையில் வேலை செய்கிறார்.

குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், பால்பாண்டியின் சிகிச்சைக்கு அதிகம் செலவானது. இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன், மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அதற்காக வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. ஒருபுறம் வறுமை வாட்டி வதைக்க, மறுபுறம் கடன் தொல்லையால் மனமுடைந்தனர்.

நேற்று முன் தினம் இரவு 10.30 மணிக்கு, பால்பாண்டி, முருகேஸ்வரி இருவரும், வீட்டில் பூச்சி மருந்து குடித்தனர். பூச்சி மருந்து வாசனை வந்ததால், அக்கம்பக்கத்தினர், பால்பாண்டியின் வீட்டுக்கு வந்தனர். ஆனால், இருவரும் பலியாகிக் கிடந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி