செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் பாகிஸ்தானில் விமானங்கள் குண்டு வீச்சில் 34 தீவிரவாதிகள் பலி!…

பாகிஸ்தானில் விமானங்கள் குண்டு வீச்சில் 34 தீவிரவாதிகள் பலி!…

பாகிஸ்தானில் விமானங்கள் குண்டு வீச்சில் 34 தீவிரவாதிகள் பலி!… post thumbnail image
லாகூர்:-பாகிஸ்தானில் கைபர் மலைப்பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் உள்ளன. எனவே, அங்கு போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று நங்குரோசா, சாந்தனா, தர்கோகஸ், திரா பள்ளத்தாக்கு, தெக்கில் ஜாம்ரூத் ஆகிய இடங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் தீவிரவாதிகளின் 8 சரணாலய பகுதிகள் தகர்க்கப்பட்டன. அங்கு பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள், வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன. 34 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் தலிபான் மற்றும் லஸ்கர்–இ– இஸ்லாம் அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் முதல், தீவிரவாதிகள் வேட்டை நடந்து வருகிறது. அது மேலும் தொடரும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி