செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது!…

தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது!…

தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது!… post thumbnail image
கொச்சி:-டெல்லியில் இருந்து கொச்சி சென்ற ஏர் இந்திய விமானம் நெடும்பசேரி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டயர் வெடித்தது. 161 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் காலை 9.10 மணியளவில் தரையிறங்கிய போது அந்த விமானத்தில் புகை கிளம்பியதை அதிகாரிகள் கவனித்தனர். இதையடுத்து அதை மேலும் ஆய்வு செய்ததில் பின்புறபும் உள்பக்கத்தில் உள்ள டயர் வெடித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் கண்டறியபப்ட்டடதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்து பற்றி பரிசோதனை மேற்கொள்ள பெங்களூருவில் இருந்து தொழிற்நுட்ப அதிகாரிகள் கொச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த சம்பவத்தால் கொச்சியில் இருந்து 138 பயணிகளுடன் காலை 10.20 மணிக்கு சார்ஜா செல்லவிருந்த விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி