செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் காரைக்குடி அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு!….

காரைக்குடி அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு!….

காரைக்குடி அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு!…. post thumbnail image
காரைக்குடி:-சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் தமிழ்நாடு கெமிக்கல் என்ற பெயரில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி ஆலையை அகற்றுமாறு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ஆலையில் திடீரென வெடிசத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து கரும்புகை வெளியானது. ஆலையில் இருந்த பாய்லர் வெடித்து விட்டதாக பலரும் அச்சம் அடைந்தனர்.

ஆலையில் இருந்து வெளியான கரும்புகையால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களிடையே பதட்டம் ஏற்பட்டது. ஆனால் பாய்லர் வெடிக்கவில்லை என்றும், காற்றழுத்தம் அதிகமானதால் பாய்லரில் ஏற்பட்ட விரிசலால் சத்தம் எழுந்து கரும்புகை வந்ததாகவும் அது தானாகவே சரியாகிவிடும் என்றும் ஆலை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தீயணைப்பு படையினர் சம்பவ இடம் விரைந்து சென்று கரும்புகைக்கான காரணங்களை ஆராய்ந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி