செய்திகள்,திரையுலகம் திருமணத்துக்கு பின் நடிக்கமாட்டேன் – நடிகை திரிஷா!…

திருமணத்துக்கு பின் நடிக்கமாட்டேன் – நடிகை திரிஷா!…

திருமணத்துக்கு பின் நடிக்கமாட்டேன் – நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், நடிகை திரிஷாவுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாயின. திரிஷாவும் வருண்மணியனும், சமீபத்தில் தனி விமானத்தில் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர். இருவருக்கும் வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷா தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறும் போது, திருமணத்துக்கு பிறகு நடிகையாக தொடர எனக்கு எண்ணம் இல்லை. ஆனாலும் சினிமாவை விட்டு விலகி செல்லமாட்டேன். சினிமா தொடர்பில்தான் இருப்பேன் என்றார். திரிஷா டைரக்ஷனில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவருக்கு விலங்குகள் மீது பிரியம் உண்டு. விலங்குகள் பாதுகாப்பிலும் அமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார். எனவே விலங்குகளை மையப்படுத்தும் படம் ஒன்றை அவர் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி