அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!…

முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!…

முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!… post thumbnail image
மும்பை:-முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான முரளி தியோரா இன்று அதிகாலை மும்பையில் காலமானார். 77 வயதான தியோரா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ப்ரீச் கேண்டி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3:25 மணியளவில் அவர் காலமானார். தியோராவின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முரளி தியோராவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று டுவிட் செய்துள்ள மோடி, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக் விஜய் சிங் கூறுகையில் எனக்கு தெரிந்த மிகவும் இணக்கமான நபர்களில் ஒருவரான தியோராவுக்கு காங்கிரஸ் கட்சி முழுவதிலும் ஏராளமான நண்பர்கள் உள்ளனர். இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.தியோராவின் உடல் மும்பையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது இறுதி சடங்கு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி