செய்திகள்,முதன்மை செய்திகள் பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!…

பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!…

பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!… post thumbnail image
ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறும் அறிஞர்களை நோபல் பரிசுக்குழுவினர் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசுக்கு பிரான்ஸ் நாட்டின் 69 வயதான எழுத்தாளர் பேட்ரியோ மோடியானோ தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இரண்டாம் உலகப்போரின்போது, பிரான்ஸ் நாட்டை ஜெர்மனியின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளை தனது படைப்பாற்றல் மூலம் தன் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்காக இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கபடுகிறது என்று நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது. பேட்ரிக்கின் பெரும்பாலான படைப்புகள் நினைவு, அடையாளம் மற்றும் குற்ற உணர்ச்சி ஆகியவற்றை மையப்படுத்தியே இருக்கும். இவரது பல படைப்புகள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள போதிலும், இவர் பிரான்ஸ் நாட்டிற்கு வெளியில் பரவலாக அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி