செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா ஓய்வு அறிவிப்பு…

துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா ஓய்வு அறிவிப்பு…

துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா ஓய்வு அறிவிப்பு… post thumbnail image
இன்சியோன்:-31 வயதான அபினவ் பிந்த்ரா ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டியில் இன்று நடைபெற்ற தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அபினவ் பிந்த்ரா தலைமையிலான சஞ்சீவ் ராஜ்புட், ரவிகுமார் ஆகியோர் அடங்கிய குழுபோட்டியிலும் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. இதுவரை ஒரு தங்கம் 7 வெண்கலம் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 13- வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி தான் தொழில் முறையிலான எனது கடைசி துப்பாக்கி சுடுதல் போட்டியாகும் என்று சமூக வளைத்தளத்தில் அபினவ் பிந்த்ரா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் பொழுதுபோக்குக்காக போட்டிகளில் கலந்து கொள்வேன் என்றும் தெரிவித்து இருக்கிறார். அத்துடன் 2016–ம் ஆண்டில் ரியோடிஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி