செய்திகள்,விளையாட்டு சாம்பியன்ஸ் லீக்: ஹோபர்ட் ஹரிக்கேன்ஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!…

சாம்பியன்ஸ் லீக்: ஹோபர்ட் ஹரிக்கேன்ஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!…

சாம்பியன்ஸ் லீக்: ஹோபர்ட் ஹரிக்கேன்ஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!… post thumbnail image
சண்டிகர்:-சாம்பியன்ஸ் லீக் டி.20 தொடரில் நேற்று ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஹரிக்கேன்ஸ் அணியை பேட்டிங் செய்யுமாறு கூறியது.இதனையடுத்து ஹரிக்கேன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டங்கும், பெயினும் களமிறங்கினர். டங்க் அதிரடியாக ஆட கேப்டன் பெய்ன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டியின் 5வது ஓவரில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெய்ன் அவுட்டானார். சிறிது நேரத்திலேயே டங்கும் அவுட்டாகி நடையை கட்டினார்.

அதன்பின் பிஸ்ஸார்டும், ஷோயப் மாலிக்கும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 18 பந்துகளை சந்தித்து 27 ரன்களை எடுத்திருந்தபோது பிஸ்ஸார்டு அவுட்டானார். அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே 14 ரன்னில் மாலிக்கும் அவுட்டானார்.பின்னர் பெர்ட்டும், வெல்சும் ஜோடி சேர்ந்தனர். அவர்களும் தங்கள் பங்குக்கு விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் தலா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கல்பிஸ் மற்றும் ஹில்பென்ஹாஸ் ஆகியோர் முறையே 6 மற்றும் 0 ரன்னில் அவுட்டாகாமல் களத்திலிருந்தனர். இறுதியில் ஹரிக்கேன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்தது.வெற்றி பெற 145 ரன்கள் தேவை என்ற நிலையில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக சேவாக்கும், வோராவும் களமிறங்கினர். இன்னிங்சின் முதல் பந்தை சந்தித்த சேவாக் டக் அவுட்டாகி பஞ்சாப் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனை தொடர்ந்து வோரா 18 ரன்களிலும், சாகா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மில்லரும் டக் அவுட்டாகி வாத்து நடை நடந்தார்.

பின்னர் மேக்ஸ்வெல்லுடன் பெய்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் ஹரிக்கேன்ஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 25 பந்துகளை மட்டுமே சந்தித்து 43 ரன்களை எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல் அவுட்டானார். அடுத்து பெய்லியுடன் பெரேரா ஜோடி சேர்ந்தார். பெரேராவும் தன் பங்குக்கு ஹரிக்கேன்ஸ் அணி பந்துவீச்சை விளாசி தள்ளினார்.இறுதியில் 17.4 ஓவரிலேயே பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது. பெய்லி 34 ரன்களுடனும், பெரேரா 35 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் பெரேரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி