செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்’ நடிகர்….!

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்’ நடிகர்….!

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்’ நடிகர்….! post thumbnail image
‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் எமிஜாக்சன் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.சேகர் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

‘மங்காத்தா’ படத்தில் அஜீத்தை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டிய வெங்கட் பிரபு இப்படத்தில் சூர்யாவை புதிய தோற்றத்தில் காட்ட போகிறாராம். இதிலும் சூர்யா இரண்டு விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார்.

இப்படத்தில் சூர்யா நீளமான முடி வைத்திருக்கும் கெட்டப்பில் வருகிறாராம். மற்றொரு கெட்டப்பை ரகசியமாக வைத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக மும்பையிலிருந்து ஸ்பெஷல் ஹேர் ஸ்டைலிஸ்ட் வரவழைக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி