அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பா.ஜனதா கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்…!

பா.ஜனதா கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்…!

பா.ஜனதா கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்…! post thumbnail image
அகர்தலா :- திரிபுராவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுதீந்திர தாஸ்குப்தா, மாநில செயலாளர் தபாஸ் பட்டாச்சாரியா மற்றும் இரண்டு நிர்வாகிகள் தாக்கப்பட்டனர். சபாஹிஜலா மாவட்டம் தக்சின் மகேஷ்பூரில் நேற்று இரவு காரில் சென்றுகொண்டிருந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களைத் தாக்கியதாக தாஸ்குப்தா புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவர்களைப் பாதுகாக்கத் தவறிய மெய்க்காவல் படையின் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி தாஸ்குப்தா கூறுகையில், “தக்சின் மகேஷ்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்பட்ட எங்கள் கட்சி தொண்டரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு வாகனத்தில் வந்தபோது கத்தி போன்ற ஆயுதங்களுடன் எங்களை தாக்கினர். வாகனத்தை அடித்து உடைத்ததுடன், கதவைத் திறந்து எங்களை வெளியே இழுக்க முயன்றனர். ஆனால், டிரைவர் வேகமாக செயல்பட்டு வாகனத்தை உடனடியாக கிளப்பி, ஜத்ராபூர் காவல்நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார்.

எங்களின் பாதுகாப்புக்காக வரவேண்டிய போலீசார் எங்களை மீட்பதற்கு வரவில்லை. எங்களை தாக்கியவர்களை தண்டிக்க வேண்டும் என்று டிஜிபி-யிடம் வலியுறுத்த உள்ளோம். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஊர்வலங்கள் நடத்த உள்ளோம்” என்றார்.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறுத்துள்ளது. பா.ஜனதா தலைவர்கள் வெற்றி ஊர்வலத்தின்போது வேகமாக வண்டியை ஓட்டி வந்து தங்கள் ஆதரவாளர்கள் மீது மோதியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி