செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 மர்ம நபர் கைது…!

படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 மர்ம நபர் கைது…!

படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 மர்ம நபர் கைது…! post thumbnail image
‘ருத்ரமாதேவி’ படம் தெலுங்கு, தமிழில் தயாராகி வருகிறது. சரித்திர கதையம்சம் உள்ள படம். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதில் அனுஷ்கா, ராணி வேடத்தில் நடிக்கிறார். அவர் அணிவதற்காக நிறைய தங்க நகைகள் வாங்கி இருந்தனர்.

அந்த நகைகளை அணிந்து நடித்து வந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் அவற்றை பெட்டிகளில் அடைத்து பத்திரமாக வைத்தனர். அதில் இரண்டு நகைபெட்டிகள் திடீர் என மாயமானது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். இரு பெட்டிகளிலும் பல லட்சங்கள் மதிப்பிலான நகைகள் வைக்கப்பட்டு இருந்தன. படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். படத்தில் துணை நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் பணியாற்றினர். அவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். பிறகு நகைகளை திருடியதாக 3 பேர் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மூவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி