செய்திகள்,திரையுலகம் மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!…

மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!…

மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!… post thumbnail image
சென்னை:-சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை ஜோதிகா நிறுத்திவிட்டார். ஒரு சில விளம்பர படங்களில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இப்போது மீண்டும் இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்கிறார்கள்.

தற்போது சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ். அடுத்து சூர்யாவின் சொந்த கம்பெனியான 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துக்கு படம் இயக்குகிறார். இது பாண்டிராஜின் பசங்க பாணியிலான குழந்தைகள் சினிமா. இதில் குழந்தைகளின் தாய் தந்தையாக சூர்யா, ஜோதிகாக நடிக்கிறார்கள். பிந்து மாதவி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் பூஜையில் சூர்யா, ஜோதிகா, நடிகை பிந்து மாதவி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், உள்பட பலர் கலந்து கொண்டனர். இது நம்ம ஆளு படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த படம் வெளிவரும் முன்பே இந்த படத்தின் பணிகளை துவக்க இருக்கிறார் பாண்டிராஜ். சூர்யா, ஜோதிகா நடிப்பது பற்றி பாண்டிராஜிடம் கேட்டபோது கதையும் தயாரிப்பு நிறுவனமும்தான் இப்போதைக்கு முடிவாகியிருக்கிறது. மற்ற விஷயங்கள் பற்றி பின்னர் பேசுவோம் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி