இந்தியாவின் முண்ணனி விஞ்ஞானிகளின் ஒருவரான சஞ்சயா ராஜாராம் பசுமைப் புரட்சியின் வாயிலாக உலக அளவில் கோதுமை உற்பத்தியை 20 கோடி டன்களுக்கும் மேலாக அதிகரித்து சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை உலக உணவுப் பரிசுக்கான அமைப்பின் தலைவர் கென்னத் எம் கின் உறுதி செய்துள்ளார். இந்த பரிசின் மதிப்பு 2.5 லட்சம் அமெரிக்க டாலர். இது இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி ஆகும்.
விஞ்ஞானி ராஜராம் இதுவரை புதிய ரக, அதிக விளைச்சல் தரக்கூடிய 480 வகையான கோதுமை வகைகளை கண்டறிந்துள்ளார். இந்த கோதுமை ரகங்கள் உலகம் முழுவதும் உள்ள 6 கண்டங்களில் ஏறத்தாழ 51 நாடுகளில் பயிரிடப்பட்டு விளைவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி