அரசியல்,செய்திகள்,திரையுலகம் தேர்தலில் ரோஜா வெற்றி பெற்றதால் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்!…

தேர்தலில் ரோஜா வெற்றி பெற்றதால் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்!…

தேர்தலில் ரோஜா வெற்றி பெற்றதால் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்!… post thumbnail image
திருமலை:-ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். இதில் 858 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்கனவே 2004 மற்றும் 2009ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ரோஜா போட்டியிட்டு தோல்வி கண்டார். மூன்றாவது தடவை அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

கணவர் டைரக்டர் செல்வமணி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று ரோஜா திருப்பதி கோவிலுக்கு சென்றார். ரோஜா வெற்றி பெற்றதற்காக கோவிலில் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டு முடிகாணிக்கை செலுத்தினார். அவருடன் மகனும் மொட்டை போட்டார். கோவிலில் சாமிதரிசனம் செய்தனர்.

சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த ரோஜா நிருபர்களிடம் கூறும் போது, நகரி தொகுதியில் என் வெற்றிக்காக கட்சி தொண்டர்களும் எனது குடும்பத்தினரும் கடுமையாக உழைத்தனர். எல்லோருக்கும் நன்றி. வெற்றி பெற்றதற்காக திருப்பதி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி