செய்திகள்,திரையுலகம் ஜப்பானிய நடிகர்கள் நடிக்கும் தமிழ்த் திரைப்படம்!…

ஜப்பானிய நடிகர்கள் நடிக்கும் தமிழ்த் திரைப்படம்!…

ஜப்பானிய நடிகர்கள் நடிக்கும் தமிழ்த் திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-தமிழில் தற்போது உருவாகிவரும் திரைப்படமான ‘ஆ’ ஒரு திகில் படாமாகும். இதில் வரும் ஐந்து திகில் கதைத் தொகுப்புகள் டோக்கியோ, துபாய், ஆந்திரப் பிரதேசத்தின் நெடுஞ்சாலை, ஏடிஎம் பூத், நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணம் போன்ற இடங்களில் நடைபெறுவதாகக் காட்டப்படுகின்றது.

டோக்கியோ பற்றிய பிரிவில் உண்மையான ஜப்பானிய நடிகர்களையே நடிக்க வைத்துள்ளதாகவும், அங்குள்ள நாடகக் குழுவில் பயிற்சி பெற்றவர்கள் இவர்கள் என்றும் இயக்குனர் ஹரி ஷங்கர் கூறியுள்ளார். இவருடன் ‘அம்புலி’ புகழ் ஹரேஷ் நாரயணும் இணைந்து பணியாற்றுகின்றார்.

திரையில் 20 நிமிடம் தோன்றும் இந்தக் காட்சிகளில் இந்த நடிகர்கள் ஜப்பானிய மொழியில் பேசியுள்ளனர். ஜப்பானிய படங்களில் தோன்றும் திகில் காட்சிகள் பயத்தைத் தருவதுடன் உணர்ச்சிகரமாகவும் இருக்கும். அதனை அப்படியே படம் பிடிக்க விரும்பியதால் தமிழில் இந்த வரிகளை தமிழில் டப் செய்யவில்லை. ஆனால் தமிழ் ரசிகர்களின் வசதிக்காக தமிழில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளோம் என்று திரைப்படத் தயாரிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி