செய்திகள்,திரையுலகம் மீண்டும் இணையும் ‘அம்புலி’ படக்கூட்டணி!…

மீண்டும் இணையும் ‘அம்புலி’ படக்கூட்டணி!…

மீண்டும் இணையும் ‘அம்புலி’ படக்கூட்டணி!… post thumbnail image
சென்னை:-அம்புலி படம் மூலம் தமிழ் பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே.ஆர்.டி. கிரியேட்டிவ் பிரேம்ஸ் நிறுவனமும், இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் புதிய படம் ‘ஆ’.

இப்படம் குறித்து இயக்குனர்கள் கூறும்போது, ‘ஆ’ என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும். இந்த வார்த்தையைவிட பலமாக பயம் என்ற உணர்வை வெளிபடுத்தும் வார்த்தை கிடையாது.
ஆவி உலகை பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் சுற்றிவர, அதில் அவர்களுக்கு ஏற்படும் பயங்கரமான அனுபவம் தான் ‘ஆ’. இப்படம் ஐந்து வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதை.

ஜப்பான், துபாய், ஆந்திராவில் உள்ள ஒரு ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை, வங்க கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஏடிஎம் ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு என்று கூறினர்.இப்படத்தில் ‘அம்புலி’ கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா, பாலா, எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கி மற்றும் பலர் நடிக்கின்றனர். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட் பிரபு சங்கர் இசையமைக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி