செய்திகள்,திரையுலகம் என் கணவர் புதுமுக நடிகையை காதலிக்கவில்லை!… வித்யாபாலனின் பேட்டி…

என் கணவர் புதுமுக நடிகையை காதலிக்கவில்லை!… வித்யாபாலனின் பேட்டி…

என் கணவர் புதுமுக நடிகையை காதலிக்கவில்லை!… வித்யாபாலனின் பேட்டி… post thumbnail image
மும்பை:-சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘டர்டி பிக்சர்’ மற்றும் ‘கஹானி’ படங்கள் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர் வித்யாபாலன். இவருக்கும் யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி சித்தார்த் ராய் கபூருக்கும் காதல் மலர்ந்தது. 2012ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் தற்போது புயல் வீச துவங்கியுள்ளதாக மும்பை பட உலகில் கிசுகிசு பரவி உள்ளது. இந்தி பட உலகில் புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த நடிகைக்கும், வித்யாபாலன் கணவர் சித்தார்த்த ராய்கபூருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவி உள்ளது. இதனால் வித்யாபாலன் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், கணவன், மனைவிக்கு இடையே தகராறு நடப்பதாகவும் கூறப்படுகிறது.

கணவனை விவகாரத்து செய்ய வித்யாபாலன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.இதனை வித்யாபாலன் மறுத்துள்ளார். அவர் கூறும் போது, எனது கணவருக்கு புதுமுக நடிகையுடன் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லை. சந்தோஷமாக இருக்கிறோம் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி