அரசியல்,செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி பிரசாரம் செய்யும் சந்திரபாபு நாயுடுவின் மகன்!…

ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி பிரசாரம் செய்யும் சந்திரபாபு நாயுடுவின் மகன்!…

ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி பிரசாரம் செய்யும் சந்திரபாபு நாயுடுவின் மகன்!… post thumbnail image
திருப்பதி:-தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக அவரது மகன் லோகேஷ் ‘யுவ பிரபஞ்சனம்’ என்ற பெயரில் யாத்திரையை தொடங்கி தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.

சந்திரபாபு நாயுடு மகன் தனது பிரசார கூட்டங்களில் நடிகர் ரஜினிகாந்த் தனது படத்தில் பேசும் ‘பஞ்ச் டயலாக்கை’ பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் ‘நரசிம் ஹா’ என்ற பெயரில் தெலுங்கில் திரையிடப்பட்டது. இந்த படம் 100 நாட்களுக்கு மேலாக ஓடி ஆந்திராவில் சாதனை படைத்தது.இந்த படத்தில் வரும் ‘அதிகமா ஆசைப்படுகிற ஆம்பிளையும், அதிகமா கோப்படுகிற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை’ என பஞ்ச் டயலாக் வரும்.

இந்த வசனத்தை தனது பிரசாரத்தின் போது லோகேஷ் பேசி சோனியா காந்தி, ஜெகன் மோகன் ரெட்டியை பகிரங்கமாக தாக்கினார். அவர் கூறும் போது, சோனியா 3வது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் ஆசையில் மாநிலத்தை பிரித்து விட்டார் என்றார்.ஜெகன்மோகன் ரெட்டி பண ஆசையால் மாநிலத்தை கொள்ளையடித்து 1 லட்சம் கோடிக்கு மேல் சொத்து குவித்து உள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி