கலிபோர்னியா:-ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவற்றின வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தை பிரதி எடுத்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட் போன் தயாரிப்பில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் குற்றம் சாட்டியது.
இதுகுறித்து சாம்சங் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதுபோல் சாம்சங் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது.கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கில்,105 கோடி அமெரிக்க டாலரை ஆப்பிளுக்கு இழப்பீடாக தரும்படி சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மேலும் இழப்பீடு வேண்டும் என்று ஆப்பிள் மீண்டும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம், ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.720 கோடி வழங்க உத்தரவிட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி