அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தென்கொரிய கப்பல் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா!…

தென்கொரிய கப்பல் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா!…

தென்கொரிய கப்பல் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா!… post thumbnail image
சியோல்:-தென் கொரியாவில் ஜின்டோ தீவுக்கு 476 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. அதில் 325க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இருந்தனர். அவர்கள் அந்த தீவுக்கு இன்ப சுற்றுலா சென்றனர்.

அக்கப்பல் நடுக்கடலில் சென்றபோது கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அதில் 250–க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். இதுவரை 183 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.மேலும் பலரது உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மோசமான பருவ நிலை காரணமாக கடல் கொந்தளிப்பாக உள்ளது.இதனால் மீட்பு பணி மெதுவாக நடந்து வருகிறது. இருந்தாலும் இறந்தவர்களின் உறவினர்கள் இதை குறை கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த விபத்து நடந்த மறுநாள் தென்கொரிய பிரதமர் சங் காங்வன் விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ஆத்திரம் அடைந்த சிலர் அவரை திட்டித்தீர்த்தனர். மேலும் அவர் மீது தண்ணீர் பாட்டிலும் வீசப்பட்டது.இதனால் அவர் மனம் உடைந்தார். இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி