செய்திகள் பள்ளி வகுப்பறையில் கும்பலால் ஆசிரியை கற்பழிப்பு!…

பள்ளி வகுப்பறையில் கும்பலால் ஆசிரியை கற்பழிப்பு!…

பள்ளி வகுப்பறையில் கும்பலால் ஆசிரியை கற்பழிப்பு!… post thumbnail image
ஜெய்ப்பூர்:-ராஜஸ்தான் மாநிலத்தில் புன்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் 20 வயது பெண் ஆசிரியை ஆக பணிபுரிகிறார். அப்பள்ளியில் 2 ஆசிரியைகளும், ஒரு சமையல்கார பெண்ணும் உள்ளனர்.

ஆசிரியை பள்ளி வகுப்பறையில் தனியாக இருந்தபோது அங்கு தயாராம், கோட்டு சிங், ஹரிசிங், பாபுலால் ஆகிய 4 பேர் வந்தனர். அவர்கள் தனியாக இருந்த ஆசிரியையை கற்பழித்தனர்.இதுகுறித்து போலீசில் புகார் செய்யயப்பட்டது. போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைமறைவாக இருக்கும் இவர்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 50 கி.மீட்டர் தூரத்தில் இருப்பது அவர்களின் செல்போன் மூலம் தெரியவந்துள்ளது.எனவே, அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு பங்கஜ் சவுத் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி