செய்திகள் தென்கொரியா கப்பல் விபத்து: ஒரே அறையில் 48 மாணவிகளின் பிணங்கள் மீட்பு!…

தென்கொரியா கப்பல் விபத்து: ஒரே அறையில் 48 மாணவிகளின் பிணங்கள் மீட்பு!…

தென்கொரியா கப்பல் விபத்து: ஒரே அறையில் 48 மாணவிகளின் பிணங்கள் மீட்பு!… post thumbnail image
சியோல்:-தென் கொரியாவில் ஜின்டோ தீவுக்கு பெர்ரி என்ற சொகுசு சுற்றுலா கப்பல் கடந்த 16ம் தேதி சென்றது. அதில் 325 மாணவர்கள் உள்பட 476 பேர் பயணம் செய்தனர். அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது தண்ணீரில் மூழ்கியது. அதில் பயணம் செய்த 174 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அவர்கள் தவிர 135 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் தவிர மீதமுள்ள 167 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது.
கடலில் மூழ்கிய கப்பலில் உடல்களை தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.மீட்பு பணியில் 35 நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கப்பலுக்குள் சென்று அதில் உள்ள 111 அறைகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது ஒரு அறையில் மட்டும் 48 மாணவிகளின் உடல்கள் கிடந்தன. அவற்றை மீட்டனர். அவர்கள் அனைவரும் உயிர்காக்கும் கவச உடை அணிந்து இருந்தனர்.
கப்பல் மூழ்கும் போது பயந்த மாணவிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள கும்பலாக ஓடி வந்து ஒரு அறைக்குள் பதுங்கியுள்ளனர்.பின்னர் வெளியேற முடியாமல் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என நீச்சல் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி