செய்திகள் தென்கொரியா கப்பல் விபத்தில் பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு!…

தென்கொரியா கப்பல் விபத்தில் பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு!…

தென்கொரியா கப்பல் விபத்தில் பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு!… post thumbnail image
சியோல்:-தென்கொரியாவில் ஜின்டோதீவுக்கு 473 பேருடன் புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் மூழ்கியது.இக்கப்பலில் 325க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். இவர்கள் ஜின்டோ தீவுக்கு இன்ப சுற்றுலாவுக்கு சென்றார்கள்.

தொடக்கத்தில் இந்த விபத்தில் 2 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதில் 200 படகுகளும், 35 விமானங்களும், 13 மீன்பிடி படகுகளும் ஈடுபடுத்தப்பட்டன. 641 பேர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 104 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி