செய்திகள் பிறந்தது முதல் ஒரு வருடமாக வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் உலகின் முதல் குழந்தை!…

பிறந்தது முதல் ஒரு வருடமாக வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் உலகின் முதல் குழந்தை!…

பிறந்தது முதல் ஒரு வருடமாக வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் உலகின் முதல் குழந்தை!… post thumbnail image
கனடா:-கனடாவில் ஒண்டோரியோவில் உள்ள தம்பதிகள் ஆன்ட்ரேவ் மற்றும் அமி.இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தையொன்று பிறந்தது.பிறந்து பல மணிநேரங்கள் ஆகியும் குழந்தை அழவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதித்த போது, குழந்தையின் தாடை அசையாமல் இருந்தது. எனவே அந்த குழந்தையால் தன்னுடைய வாயை திறக்க முடியவில்லை. உலகின் மிகச்சிறந்த மருத்துவர்களை சந்தித்தும், குழந்தையின் பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை.

இதுகுறித்து ஒன்ராறியோவின் மருத்துவர் கூறுகையில்,உலகில் இம்மாதிரியான குறையுடன் இதுவரை எந்த குழந்தையும் பிறந்ததில்லை என்றும், இதுதான் முதல் குழந்தை எனவும் கூறியுள்ளார்.இதற்கிடையே குழந்தையின் பெற்றோர் இதற்கான தனியாக இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து, இந்த குறையை சரிசெய்யக்கூடிய ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி