இதையடுத்து ஆந்திர மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர் இந்திர சேனா ரெட்டி ஆந்திர ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மத்திய அரசு வழங்கிய கவுரவ விருதை இருவரும் சொந்த ஆதாயத்துக்காகவும், தங்களின் சினிமா வாழ்க்கையை மேம்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். எனவே விருதை திரும்ப பெற வேண்டும் என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த ஆந்திர ஐகோர்ட்டு, நடிகர்கள் மோகன்பாபு, பிரம்மானந்தம் ஆகியோர் பத்மஸ்ரீ விருதை சொந்த ஆதாயத்துக்கு பயன்படுத்தியதால் விருதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. மனு விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, நடிகர்கள் மோகன் பாபு, பிரம்மானந்தம் ஆகியோரிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற தடை விதித்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி