அரசியல்,செய்திகள் விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திருநங்கை கல்கி!…

விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திருநங்கை கல்கி!…

விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திருநங்கை கல்கி!… post thumbnail image
புதுச்சேரி:-விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தில் வசித்து வரும் திருநங்கை கல்கி (வயது 40). இவர் சகோதரி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் நர்த்தகி என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

கடந்த 2010–ம் ஆண்டு அமெரிக்க அரசின் சிறப்பு பிரதிநிதியாக அமெரிக்காவுக்கு சென்று திரும்பியவர் ஆவார். இவர் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இது குறித்து திருநங்கை கல்கி இன்று புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:–நான் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் எம்.ஏ. முதுகலை பட்டமும், சிதம்பரம் பல்கலைகழகத்தில் சர்வதேச உறவுகள் கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். சமூக சேவையில் கடந்த 10 ஆண்டுகளாக நான் ஈடுபடுவதால் திருமணம் செய்து கொள்ளவில்லை.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விழுப்புரம் தொகுதி மக்களை சந்தித்து ஆதரவு கேட்டேன். திருநங்கையான என் மீது அனைவரும் அன்பு கொண்டுள்ளனர். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறந்த மக்கள் பிரதிநிதியாக செயல்படுவேன். விழுப்புரத்தை தொழில் வளர்ச்சி பெற்ற நகரமாக பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி