அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கனிமொழியுடன் அழகிரி இன்று திடீர் சந்திப்பு!…

கனிமொழியுடன் அழகிரி இன்று திடீர் சந்திப்பு!…

கனிமொழியுடன் அழகிரி இன்று திடீர் சந்திப்பு!… post thumbnail image
சென்னை:-தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அழகிரி தமிழ்நாடு முழுவதும் ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

நேற்று இரவு தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்பிய நேரம் பார்த்து மு.க.அழகிரி கோபாலபுரம் வீட்டுக்குச் சென்றார். அங்கு தாயார் தயாளு அம்மாளை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். 20 நிமிடங்கள் தாயாருடன் பேசி விட்டு புறப்பட்டுச் சென்றார்.இந்நிலையில் இன்று காலை மு.க.அழகிரி சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி வீட்டுக்கு சென்றார். அங்கு கனிமொழியை சந்தித்து 40 நிமிடங்கள் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். என்ன பேசினார்கள் என்பது வெளியாகவில்லை.

அழகிரி சென்றதும் அவர் வந்து விட்டு சென்றதையும் பேச்சு விவரங்களையும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கனிமொழி தெரிவித்தார்.தி.மு.க.வில் இருந்து அடியோடு நீக்கப்பட்ட பின்பு கனிமொழியை அழகிரி சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி