“146 கோடி” குண்டர்கள் !!!..

“146  கோடி” குண்டர்கள் !!!.. post thumbnail image
இன்று, பல மனிதர்களின் பெரும் பிரச்சனை உடல் பருமன் தான். லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்தில், உலகில் உடல் எடை அதிகரிப்பு மற்றும் பருமன் ஆன மனிதர்களின் எண்ணிக்கை பற்றி ஆய்வு மேற்கொண்டது.அதில், சர்வதேச அளவில் 146 கோடி பேர் உடல் பருமனாகி குண்டு மனிதர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. 1980 முதல் 2008–ம் ஆண்டுகளுக்கு இடையேதான் இந்த விகிதம் அதிகரித்துள்ளது.

பல, வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் தான் உடல் பருமன் கொண்ட நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு உணவு பழக்க வழக்கத்தின் மாற்றமே காரணம் என தெரிய வந்துள்ளது.

வளரும் நாடுகளில் தனி மனிதனின் வருமானம் அதிகரித்து வசதியான வாழ்க்கை ஏற்படுகிறது. அதனால் உணவு பழக்க வழக்கம் மாறுகிறது. கொழுப்பு மற்றும் சர்க்கரை சத்து மிகுந்த உணவு வகைகளை சாப்பிடுகின்றனர். அதனால், உடல் பருமன் மற்றும் பல வித நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இவ்வாறு, அந்த ஆய்வில் தெரிவித்து இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி