செய்திகள்,முதன்மை செய்திகள் குழந்தைகளை கடத்தி விற்ற டாக்டர் கைது …

குழந்தைகளை கடத்தி விற்ற டாக்டர் கைது …

குழந்தைகளை கடத்தி விற்ற டாக்டர் கைது … post thumbnail image
சீனா :-சீனாவின் வடக்குப் பகுதியில் மருத்துவமனைகளிலிருந்து குழந்தைகளைத் திருடி இடைத்தரகர்களுக்கு விற்றதாக பெண் மருத்துவர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.குழந்தைகளைக் கடத்தும் வலையமைப்புக்களுக்கு, அந்த இடைத் தரகர்கள் குழந்தைகளை விற்க அந்த மருத்துவர் உதவினார் என்று குற்றஞ்ச்சாட்டப்பட்டது.

ழாங் ஷு ஷியா எனும் அந்த மகப்பேறு மருத்துவர் ஏழு குழந்தைகளை அந்த வகையில் விற்று சில ஆயிரம் டாலர்களை ஈட்டினார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.அக்குழந்தைகள் பிறக்கும்போதே சில குறைபாடுகளுடன் பிறந்தன என்று அந்த மருத்துவர், பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.மருத்துவமனைக்கு வந்த ஒரு தாய் அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு புகார் செய்ததை அடுத்து, அந்த மருத்துவர் பணியிலிருந்து ஓய்வுபெறவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வகையில் கடத்தப்பட்டு இடைத்தரகர்களிடம் கொடுக்கப்பட்ட ஏழு குழந்தைகளில் ஆறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன என்றாலும் அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது.இதே கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் எட்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி