செய்திகள்,முதன்மை செய்திகள் போதை பொருளை கண்டுபிடித்த நாய்…

போதை பொருளை கண்டுபிடித்த நாய்…

போதை பொருளை கண்டுபிடித்த நாய்… post thumbnail image
மும்பை:-புதுடெல்லியில் இருந்து இன்று அதிகாலை மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,தென்னாப்ரிக்காவில் இருந்து வந்த இளம் பெண்ணின் பையில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை மோப்ப சக்தியால் அறிந்த நாய், அந்த பையின் அருகே சென்று குறைத்தது.

இதையடுத்து 23 வயதான அந்த பட்டதாரி பெண்ணின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.7.5 கோடி மதிப்பிலான 15 கிலோ போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தி வந்த பெண்ணையும் கைது செய்தனர்.விசாரணையில் அவர் டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு, இந்த போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. மும்பையில் இருந்து எத்தியோப்பியாவுக்கு கடத்த முயன்றபோது அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி