செய்திகள்,முதன்மை செய்திகள் உல்லாசத்துக்கு வர மறுத்த மாமியாரை கொலை செய்த மருமகன் …

உல்லாசத்துக்கு வர மறுத்த மாமியாரை கொலை செய்த மருமகன் …

உல்லாசத்துக்கு வர மறுத்த மாமியாரை கொலை செய்த மருமகன் … post thumbnail image
ஜோலார்பேட்டை:-ஜோலார்பேட்டை அடுத்த குண்டு ரெட்டியூரை சேர்ந்தவர் போகி கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லட்சுமி (வயது 40). கூலி வேலை செய்து வந்தார்.புத்தாண்டு இரவு முதல் லட்சுமியை காணவில்லை. அவரது கணவர் பல இடங்களில் தேடிபார்த்தனர்.

இந்நிலையில் சின்ன பொன்னேரியில் லட்சுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.அதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் லட்சுமிக்கும் அவரது மருமகன் வெங்கடேசனுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் கூறியதாவது:–வெங்கடேசனுக்கும் லட்சுமிக்கும் கடந்த 2 வருடங்களாக கள்ள தொடர்பு இருந்து வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லட்சுமி திடீரென கள்ள தொடர்புக்கு மறுத்துள்ளார். அப்போது வெங்கடேசன் நீதான் அழகாக இருக்கிறாய் நான் உன்னுடன் தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார்.
இதனை கேட்டு லட்சுமி மகளின் வாழ்வு பாழாகி போய் விடுமோ என்று அச்சம் அடைந்தார். இதனால் கள்ள காதலுக்கு மறுத்து கூலி வேலைக்கு சென்றார். அப்போது லட்சுமிக்கு வேறு நபருடன் கள்ளகாதல் இருப்பதாக வெங்கடேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதனால் அவரிடம் தகராறு செய்து வந்தார். மேலும் அடிக்கடி உல்லாசத்துக்கும் வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வெங்கடேசன் சென்னைக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் லட்சுமியை தனியாக பேச வேண்டும் என பொன்னேரிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு உல்லாசத்துக்கு வற்புறுத்தி உள்ளார். லட்சுமி மறுத்ததால் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி