செய்திகள்,முதன்மை செய்திகள் பிரேசிலில் வெள்ளப்பெருக்கு 43 பேர் பலி…

பிரேசிலில் வெள்ளப்பெருக்கு 43 பேர் பலி…

பிரேசிலில் வெள்ளப்பெருக்கு  43 பேர் பலி… post thumbnail image
தென்அமெரிக்க நாடான பிரேசிலில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள விலா வெல்ஹா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வீதிகளில் ஓடும் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.

எனவே 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மேலும் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்றன. மீட்பு பணியில் ராணுவ வீரர்களும், மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.வெள்ளம் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி