செய்திகள்,முதன்மை செய்திகள் ஓரின சேர்க்கைக்கு அழைத்தவரை கொலை செய்தவர் கைது…

ஓரின சேர்க்கைக்கு அழைத்தவரை கொலை செய்தவர் கைது…

ஓரின சேர்க்கைக்கு அழைத்தவரை கொலை செய்தவர் கைது… post thumbnail image
திருவள்ளூர் அருகே தொடுகாடு ஊராட்சியில் உள்ள பராங்கூசபுரம் கிராமத்தில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டது. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜன் (35) மேலாளராக இருந்தார். குடிபோதையில் பாதித்தவர்களுக்கு இவர்தான் சிகிச்சை அளித்துவந்தார்.

இவரது கார் டிரைவராக திருநெல்வேலியை சேர்ந்த ஜேக்கப் (26) பணியாற்றினார்.கடந்த மாதம் 24ம் தேதி மையத்தில் உள்ள அறையில் பாண்டியராஜன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. அன்று முதல் டிரைவர் ஜேக்கப், தலைமறைவாகிவிட்டார்.இதுபற்றி மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே நின்ற பாண்டியராஜன் காரை போலீசார் கைப்பற்றினர். ஜேக்கப்பை தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் அரக்கோணம் ரயில்நிலையத்தில் நின்றிருந்த ஜேக்கப்பை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவரை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.போலீசாரிடம் ஜேக்கப் அளித்த வாக்குமூலத்தில், ‘‘பாண்டியராஜன் என்னை ஓரின சேர்க்கைக்கு அழைத்தார். நான் வர மறுத்து வந்தேன். கடந்த மாதம் 24ம் தேதி என்னை அவரது அறைக்கு அழைத்துச்சென்று, ஓரின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தினார். இதனால் அங்கிருந்து கடப்பாரையை எடுத்து, பாண்டியராஜன் தலையில் வெட்டினேன். அவர் மயங்கி விழுந்ததும் பீரோவை உடைத்து அதில் உள்ள பேப்பர்களை உடல் மீது போட்டு தீவைத்து கொளுத்தினேன். அவர் இறந்தபிறகு பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றினேன். மும்பைக்கு ரயிலில் செல்ல அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வந்தபோது போலீசில் சிக்கிக்கொண்டேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி