திரையுலகம் சர்வதேச திரைப்பட விழா…பாராட்டு மழையில் “தூங்கா நகரம்”

சர்வதேச திரைப்பட விழா…பாராட்டு மழையில் “தூங்கா நகரம்”

Tamil Movie Thoonga Nagaram

காணொளி:-

நல்ல மனசு, கெட்ட பழக்க வழக்கங்கள்… என மதுரையில் வாழும் நான்கு நண்பர்களின் கதையையும், காதலையும் நேர்த்தியாக சொல்லிய படம் தூங்கா நகரம். இப்படத்தில் விமல், பரணி, நிஷாந்த், கௌரவ், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை இயக்கிய இயக்குனர் கௌரவ்-க்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்படத்துக்கு நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைத்தது. மேலும் துபாயிலும் விருதுகள் வாங்கியுள்ளது. இதனால் இயக்குனர் கௌரவ் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இப்படத்தை பார்த்த வெளிநாட்டினர் உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தரமான படம் என பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் இவர் அடுத்து ‘சிகரம் தொடு’ என்ற புதிய படத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். தந்தை-மகன் உறவு குறித்து ஆழமாக சொல்லக்கூடிய ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகிறது. சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி