செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் கவிஞர் வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது!…

கவிஞர் வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது!…

கவிஞர் வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது!… post thumbnail image
சென்னை:-தேசிய விருது கவிஞரான வைரமுத்து தமிழ் மொழிக்கும், இலக்கியத்துக்கும் வானளாவிய பங்களிப்பை அளித்திருக்கிறார். எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ள கவிஞர் வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞருக்கான எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருதை வழங்கி கௌரவிக்க உள்ளது.

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த வருடம் இந்த விருதுக்கு கவிஞர் வைரமுத்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இந்த விருது வழங்கும் விழா வருகிற அக்டோபர் 12ம் தேதி நடைபெறவிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி