செய்திகள்,திரையுலகம் பாட்டுப் பாட வாய்ப்பு கேட்கும் நடிகை லட்சுமிமேனன்!…

பாட்டுப் பாட வாய்ப்பு கேட்கும் நடிகை லட்சுமிமேனன்!…

பாட்டுப் பாட வாய்ப்பு கேட்கும் நடிகை லட்சுமிமேனன்!… post thumbnail image
சென்னை:-தமிழில் ‘கும்கி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இப்படத்தை தொடந்து ‘சுந்தரபாண்டியன்’ ‘குட்டிபுலி’, ‘பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டாகி வருவதால் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் முதன்மை தேர்வாக இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தற்போது ஒரு படத்தில் பாட்டுப் பாடி பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.இதைப்பற்றி லட்சுமிமேனன் கூறும்போது, நான் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ படத்தில் ‘குக்குறு குக்குறு…’ எனத் தொடங்கும் பாடலை பாடியுள்ளேன். இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

என்னுடைய பாட்டி இசை ஆசிரியர். ஆதலால் இசை என் ரத்தத்தில் ஊறியுள்ளது. நான் நிறைய பாடல்கள் பாட ஆசைப்படுகிறேன். பாட்டு பாட வாய்ப்புகள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி