செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 20000 ஆக உயரும்!… உலக சுகாதார மையம் எச்சரிக்கை…

எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 20000 ஆக உயரும்!… உலக சுகாதார மையம் எச்சரிக்கை…

எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 20000 ஆக உயரும்!… உலக சுகாதார மையம் எச்சரிக்கை… post thumbnail image
நியூயார்க்:-உலகில் உள்ள மக்களை பெரிதும் அச்சுறுத்தி வரும் எபோலா நோயால் இது வரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது பலியாகி இருப்பவர்களின் எண்ணிக்கையை விட 6 மடங்கு உயர்ந்து சுமார் 20,000 பேரை எட்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்த நோயை தடுக்க அடுத்த ஆறு மாதங்களில் 490 மில்லியன் டாலர் பணம் தேவைப்படும் என்றும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் இந்நோயால் பெரும்பாலானோர் இறக்கக்கூடும் என்று சுகாதார மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி