செய்திகள்,திரையுலகம் மீண்டும் இணையும் ஷாருக்கான்-கஜோல் ஜோடி!…

மீண்டும் இணையும் ஷாருக்கான்-கஜோல் ஜோடி!…

மீண்டும் இணையும் ஷாருக்கான்-கஜோல் ஜோடி!… post thumbnail image
மும்பை:-பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஜோடி என்று அழைக்கப்படும் ஷாருக்கான்-கஜோல் ஜோடி, வெகு நாட்களுக்கு பின் தற்போது மீண்டும் இணைய உள்ளது.குச் குச் ஹோத்தா ஹை, தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே, மை நேம் இஸ் கான் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் ஷாருக்கானும், கஜோலும் ஜோடியாக நடித்துள்ளனர். 2010ம் ஆண்டு வெளியான மை நேம் இஸ் கான் படத்திற்கு பிறகு இந்த ஜோடியை மீண்டும் ஒன்றிணைத்து படம் பண்ண எத்தனையோ டைரக்டர்கள் முயன்றும் முடியவில்லை.

ஷாருக்கானுக்கும், கஜோலின் கணவரும் நடிகருமான அஜய் தேவ்கனுக்கும் ஏற்பட்ட உறசல் காரணமாகவே இந்த ஜோடி மீண்டும் சேர்ந்து நடிக்க முடியாமல் போனதாக பாலிவுட்டில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், பல டைரக்டர்கள் முயன்றும் முடியாமல் போன ஷாருக்கான்-கஜோல் ஜோடியை ஒன்றிணைக்கும் முயற்சியில் டைரக்டர் ரோஹித் ஷெட்டி வெற்றி பெற்றுள்ளார்.ரோஹித் ஷெட்டி, அஜய் தேவ்கனின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரையும் ஷாருக்கானையும் சமாதானப்படுத்தி, இந்த புதிய படத்திற்கு சம்மதம் பெற்றுள்ளாராம். கடந்த வாரம் கஜோலை சந்தித்த ரோஹித் ஷெட்டி, தனது புதிய படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த படம் பற்றிய விஷயங்கள் இறுதி செய்யப்பட்டதும், விரைவில் படம் பற்றிய முறையான அறிவிப்பை ரொஹித் ஷெட்டி வெளியிட உள்ளார். அடுத்த ஆண்டின் முதல் பாதியில் இந்த படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம் ரோஹித் ஷெட்டி.பாடல்கள், வசனங்கள் மூலம் படத்தை ஹிட்டாக்கி தற்போது பாலிவுட்டின் சூப்பர் ஹிட் டைரக்டராக திகழும் ரோஹித் ஷெட்டி, இந்த சூப்பர் ஹிட் ஜோடியை வைத்து மீண்டும் படம் எடுக்க உள்ளதால் இந்த படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி