அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…

பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…

பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புது தில்லி புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணிக்கு தில்லி சென்றடைந்த அவர், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.

நண்பகல் 12.30 மணியளவில் ஜெயலலிதா, மோடியை சந்திப்பதாக இருந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே இன்று காலை சாலைவிபத்தில் அகால மரணமடைந்தார்.அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டது. இன்று மாலை 3.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். அப்போது தமிழக பிரச்சனைகள் குறித்து மோடியுடன் பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி